Friday, August 7, 2009









தினம் மஞ்சள் நீராடும்
கன்னங்கள் பூசும்
நாணசிவப்பு
அவள் மெல்ல
சிரிக்கையிலே
உதிர்ந்து போகுதம்மா
ரோஜா இதழ்கள்,,,,,,,
மின்னித்தெரித்திடும் கண்கள்
விண்மீனின் இரட்டை குழந்தையோ,,,,,
மான்விழியில்
தீட்டிய மைதான்
கரு இருளின் சீதனமோ,,,,,,,
நீ மெல்ல நடக்கையிலே
வீழ்ந்து போகிறேனம்மா
உன் அன்ன நடையிலே ,,,,,,
தினம் எண்ணி எண்ணி
நான் உறைந்து போகிறேனம்மா
இயட்கை தந்த
என் அழகு குறிப்பே,,,,,,,,,,,,,,,








உனக்காக தோன்றிய கவிதை
என் மனதோடு விதை போட்ட கவிதை,,,,
என் நினைவோடு துளிர்விட்ட கவிதை,,,,,
இருந்தும் எழுத இயலவில்லை
என் விரல் கொண்ட பேனாவுக்கு ,,,,,
பேனாவின் நுனியினில் வடிவம் பெரும்
எழுத்துகள் போலே,,,
என் மனதோடு உரு பெரும் உன் கவிதை,,,.,

இருந்தாலும் எழுத மனமில்லை.....

எண்ணங்களில் தொடர்கிறது
உன்னை பற்றிய கவிதை,,,,,,,

வெள்ளை ஏடுகளில் எழுதி
கவிதையை முடிக்க மனமில்லை,,,,,

தினம் தினம் தொடர்கிறது
உன்னை பற்றிய கவிதை

இருந்தும் எழுத மனமில்லை.......

மீண்டும் விழி சாய்கிறேன்
எழுதாத உன் கவிதைகளின்
நினைவுகளோடே,,,,,,,,,,,





நம் இதழ்கள் பிரிந்து
பேசியதில்லை இதுவரை
தினம் உன் பாத கொலுசு
பேசியது என் கண்களோடு,,,,,,,,,

தினம் நீ சிந்தும் புன்னகைக்கு
மறுமொழிதான்
என் இதழ் சிந்தும் புன்னகை ......

பாஷை அறியாமல் பேசிகொண்டது
நம் விழிகள் .......

இருந்தும் களைய வில்லையே
உன் மௌனம்
என் கல்லறை வாசலில்
நீ செலுத்திய மௌன அஞ்சலி ,,,,

முழுமதியாய் ஒளி வீசினேன்
உன் முகமதியை கண்டதும்
வானெங்கும் நிலவென்பது
ஒரு நெற்றி திலகமாக.......
உன் வாழ்வென்கிலும்
ஒளி வீசினேன்
ஒரு காதல் திலகமாக ,,,,,,,,,,
இருந்தும்
என்னை
உடைத்தெறிந்து போனாயடா
உன் மின்னல் தெறித்த
வாய்மொழியாலே .........
நானும்
என் நிலை அறியாமல் நின்றேனடா
திசைதெரியாமல்
ஒளி வீசும்
உடைந்த நிலவை போல