Friday, August 7, 2009









தினம் மஞ்சள் நீராடும்
கன்னங்கள் பூசும்
நாணசிவப்பு
அவள் மெல்ல
சிரிக்கையிலே
உதிர்ந்து போகுதம்மா
ரோஜா இதழ்கள்,,,,,,,
மின்னித்தெரித்திடும் கண்கள்
விண்மீனின் இரட்டை குழந்தையோ,,,,,
மான்விழியில்
தீட்டிய மைதான்
கரு இருளின் சீதனமோ,,,,,,,
நீ மெல்ல நடக்கையிலே
வீழ்ந்து போகிறேனம்மா
உன் அன்ன நடையிலே ,,,,,,
தினம் எண்ணி எண்ணி
நான் உறைந்து போகிறேனம்மா
இயட்கை தந்த
என் அழகு குறிப்பே,,,,,,,,,,,,,,,








உனக்காக தோன்றிய கவிதை
என் மனதோடு விதை போட்ட கவிதை,,,,
என் நினைவோடு துளிர்விட்ட கவிதை,,,,,
இருந்தும் எழுத இயலவில்லை
என் விரல் கொண்ட பேனாவுக்கு ,,,,,
பேனாவின் நுனியினில் வடிவம் பெரும்
எழுத்துகள் போலே,,,
என் மனதோடு உரு பெரும் உன் கவிதை,,,.,

இருந்தாலும் எழுத மனமில்லை.....

எண்ணங்களில் தொடர்கிறது
உன்னை பற்றிய கவிதை,,,,,,,

வெள்ளை ஏடுகளில் எழுதி
கவிதையை முடிக்க மனமில்லை,,,,,

தினம் தினம் தொடர்கிறது
உன்னை பற்றிய கவிதை

இருந்தும் எழுத மனமில்லை.......

மீண்டும் விழி சாய்கிறேன்
எழுதாத உன் கவிதைகளின்
நினைவுகளோடே,,,,,,,,,,,





நம் இதழ்கள் பிரிந்து
பேசியதில்லை இதுவரை
தினம் உன் பாத கொலுசு
பேசியது என் கண்களோடு,,,,,,,,,

தினம் நீ சிந்தும் புன்னகைக்கு
மறுமொழிதான்
என் இதழ் சிந்தும் புன்னகை ......

பாஷை அறியாமல் பேசிகொண்டது
நம் விழிகள் .......

இருந்தும் களைய வில்லையே
உன் மௌனம்
என் கல்லறை வாசலில்
நீ செலுத்திய மௌன அஞ்சலி ,,,,

முழுமதியாய் ஒளி வீசினேன்
உன் முகமதியை கண்டதும்
வானெங்கும் நிலவென்பது
ஒரு நெற்றி திலகமாக.......
உன் வாழ்வென்கிலும்
ஒளி வீசினேன்
ஒரு காதல் திலகமாக ,,,,,,,,,,
இருந்தும்
என்னை
உடைத்தெறிந்து போனாயடா
உன் மின்னல் தெறித்த
வாய்மொழியாலே .........
நானும்
என் நிலை அறியாமல் நின்றேனடா
திசைதெரியாமல்
ஒளி வீசும்
உடைந்த நிலவை போல

Friday, July 3, 2009

சுமைகள்



என் கண்களுக்கு பார்வை கூடசுமைதான்,,,,,,

உன்னை காணும்வரை,,,,,,,,

நிழல்படம் தேய்ந்து போகிறது

என் கை ரேகைகளோடு,,,,

நிஜமாக நீ என்முன்வந்து விடு,,,,,,

இணைசேர காத்திருக்கிறதுஎன் ஜீவன்,,,,,,

********* இனியவள் செலினா*************


Thursday, July 2, 2009

கண்ணாடி சிதறல்கள்
அருகில் சென்று காண்கிறேன்
பிம்பங்களில் தெரிவது நீயடா ,,,,,,,,,

சிதைந்த இதயத்தில்
உருகிய காயங்கள்
இரத்தம் கசியவில்லை
உன் நினைவுகள் கசியுதடா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


அள்ளி அள்ளி சேர்த்து வைத்தேன்
உன் காதல் மரகதங்களை
இன்று காற்று வீசியதும்
நீ பறக்க துடிப்பது ஏனடா,,,,,,,,,,,,,,,,

என் சுவாசத்தில் தானே
உன் சுவாசத்தை சேமித்தேன்,,,,,
இன்று சுவாசம் இருந்தும்
மூச்சு திணறல் ஏனடா,,,,,,,,,,,,,


உன் காதல் அணைப்பில்
உலகை மறந்தேன்,,,,,
ஆனால் இன்று உலகம்
என்னை மறந்து நான் தனிமை காண்பது ஏனடா,,,,,,,,,,,,,,,

இதயம் முழுதும் உன்னை சுமந்தேன்,,,,,
அந்த இதயதுக்கே நான் சுமையாய் போனது ஏனடா,,,,,,


கனவில் கூட உன் முகம் தானே
என் உறக்கம் தொலைந்தது தெரிகிறதா,,,,,,,,,,,,

வாழும் நாட்கள் கடைமுனை மட்டும்
உன் காதலை சுமக்கும் அடிமை நானாடா ,,,,,,,,,,,



கடந்து வந்த பாதைகளை திரும்பபார்கிறேன்,,,,
வசந்தம் காலம் மீண்டும் பிறந்திடுமா
என் அன்பே,,,,,,,,,,



Sunday, June 28, 2009

ஒற்றை ரோஜா

வாழ்வின் கடைமுனைமட்டும்
உன் மனதிலே நான் வாழ வேண்டும் ஒற்றை ரோஜாவாக ,,,,,,,,,,,,

காதல் வானிலே

சுதந்திர பறவையாய்
நான் பறந்து மகிழ்கிறேன் நம் காதல் வானிலே
என் சிறகுகளில் சுமந்திருக்கிறேன்
உன் நினைவுகளை மட்டும்

Tuesday, June 23, 2009

நட்பு என்றும் நலம் குன்றாது,,,,,,ஆயிரம், நோய் தாக்கி பல்லாயிரம் பாதளம் வந்தாலும் நட்புக்கு இல்லை அழிவு என்றும் நலமே உருவாக உயிர்ப்பிக்கும் அழியா வரம் நட் நட்பு என்றும் நலம் குன்றாது,,,,,,
ஆயிரம், நோய் தாக்கி
பல்லாயிரம் பாதளம்
வந்தாலும் நட்புக்கு இல்லை அழிவு
என்றும் நலமே உருவாக
உயிர்ப்பிக்கும் அழியா வரம் நட்பு
என் உள்ளக்கிடங்கில் சேர்த்து
வைத்த உன் நினைவலைகளை அள்ளி வீசுகிறேன்,,,,,,
அது கடலையும் மிஞ்சி பொங்கி எழும்
பேரலைகலாகிஉன்னை அள்ளி செல்லும்,,,,,,,,,,
என் எண்ண அலைகளில்
நீந்திப்பார்என் மனம் எனும் ஆழ்கடல் எங்கும்....
உன் நினைவுகள் பதிந்த முத்துக்கள் ஒளிந்திருக்கும்,,,,,
உன் நினைவாலே உருவாகிய காதல் கடலை,,,,,,
வற்றாமல் நிலை காப்பாய் என் ஆருயிரே,,,,,,,,,,,,,


******* இனியவள் செலினா ***********

Tuesday, June 16, 2009

மனம்

தென்றல் தீண்டி பூக்கள் மலர்வதுண்டு,,,,,, உண் பார்வை தீண்டி,,,,,, தினம் ஒரு பூக்களாய் மலர்கிறது நம் காதல்,,,, ,,,,,, இரவிலும் பகலிலும் உன்னை யோசிக்காத நிமிடங்களை தேடுகிறேன்,,,,,,,, இல்லாத நிமிடங்களை தேடாதே என்றது கடிகாரம்,,,,, உன்னை சுமப்பதால் தான் என் மனம் பாரமில்லாமல் போனது,,,,, என் வாழ்வில் மீண்டும் வசந்தத்தின் தென்றலை உணர்கிறேன்,,,, உன் வருகையினாலே,,,,,,,,, அன்பே ஆருயிரே,,,,,,,, கடந்து போகும் நாட்களோடு என்னையும் அள்ளி செல்ல வருவாயா,,,,,,,,

Wednesday, June 3, 2009

அன்பே உன் அணைப்பு






உருகும் உன் காதல் தீயில்
எரியும் சிறு தீபம் நான்,,,,,,,
அணைத்து அணைத்து
என்னை சுடர் படர வைக்கும்
உன் காதல் தீண்டல்கள்,,,,,,
தினமும் உருகி போகிறேன் அன்பே,,,,,


உனக்கும் எனக்கும் நடுவினிலே
சுவாசம் கொஞ்சம் இருக்கட்டும்
காற்றுக்கு கொஞ்சம் இடம் கொடு அன்பே,,,,,,

என் இடை சேர்க்கும் உன் கைகளை
அணைத்து கொள்வேன்,,,,,
உன் அணைப்பினை தடுக்கும்
நாணத்தை விலக்கி கொள்வேன்,,,,,,,,

போதும் போதும் என சொல்லும்
என் இதழ் நீ முத்தமிடும்
வேலையில்,,,,,,

வேண்டும் வேண்டும் என்கிறது
மனம்
உன் செல்ல தீண்டல்களை,,,,,,,

உன் பார்வையில் மயங்குகிறேன்,,,,,,
வருடலில் உருகுகிறேன்,,,,,
அனைபினில் கசங்குகிறேன்,,,,,,
முழுதும் உன்னில் தொலைந்து
போகிறேன்,,,,,,

விடை கொடுக்க வேண்டம்
நாம் சேர்ந்து இருக்கும் நிமிடங்களுக்கு ,,,,,,
நாட்கள் அப்படியே உறைந்து போகட்டும்,,,,,,,
உன் அணைப்பில் என் ஜீவன்
உருகி ஓடட்டும்,,,,,,,

Thursday, May 28, 2009

காதல்...........





என்னில் என் உறவாய் நீ இருக்க

உன்னில் உன் உயிரில் நான் கலந்திருக்க,,,,,,,,,,,,,


நம்மில் முழுமதியாய் ஒலி வீசுமே


காதல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,


Wednesday, May 27, 2009


தொடுவானம் தூரமெங்கும்
என்னில் தொலைக்க முடியாத
அவள் நினைவுகள்,,,,,,,,,,
அலை கடல் போல்
மலர்கள் மலர்ந்திருந்தாலும்,,,,,,,,,,
வாசம் இல்லை என் சுவாசத்திலே ,,,,,
பகலிரவாய் தேடுகிறேன்,,,,,,,,
என்னவளின் பிம்பகளை

அதோ தெரிகிறாள் தேவதை,,,,,,,,
அந்தி சாயும் நேரத்தில்,,,,,,
கையில் ஒற்றை பூவோடு
என் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு,,,,,,,,,,

உருகும் நினைவுகள்


தனிமையில் உருகும் உன் நினைவுகள்,,,,,,,,,
மெழுகை போல் நான்,,,,,,,,,
என் உயிரிலே நினைவுகளாய்
உருகும் தீ நீதானே,,,,,,,,
உருகி உருகி வீழ்கிறேன் உன் மடி மேலே,,,,,,,,,,,,
காதல் எனும் அணைப்பை கொடுப்பாயா என் அன்பே,,,,,,,,,



Monday, May 25, 2009

கண்ணீர் பரிசு,,,,,,,,,,,,,,,,


விழிகளில் நீர் எதத்கடி பெண்ணே,,,,,,,,,,,,,
உன் புன்னகையை திருடிசென்றவனுக்கு ,,,,,,,,,,,,,,,,
கண்ணீரை பரிசளிக்கின்றாயா ,,,,,,,,,,,,,,,,,,!!!!!

திருடிய இதயம்,,,,,,,,,,

நீ திருடிய என் இதயத்தை பிடிக்க நான் துரத்திசென்றேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆனால்
உணர மறந்து விட்டேன்,,,,,,,,,,,,,,,,
எனக்குள்
துடித்துகொண்டிருப்பது உன் இதயம்தான் என்று,,,,,,,,,,,,,,,,,,,,

தீண்டிய தென்றல்


என்னவளை தீண்டி சென்ற
தென்றலை பிடித்து சிறை வைக்கிறேன்,,,,,,,,,,
அவை எனக்கு மட்டுமே
சுவாசக் காற்றாய் மாறட்டும்,,,,,,,,,,,,,,,

உதிரிபூக்கள்,,,,,,,,


மலர்கள் செய்தன உயிர்த்தியாகம்,,,,,,,,,,,,,,,,,,

அவள் மலர்போன்ற பாதத்தின் மீது ஆசை கொண்டு,,,,,,,,,,,

உதிரிப்பூக்களாய் காத்து கிடக்கின்றன,,,,,,,,,,,,,

அவள் வருகைக்காக,,,,,,,,,,,,,,,,,,

காதல் கைதி,,,,,,,,,


அன்பே உன் இதயம் பூட்டி வைத்த சிறைசாலை என்று சொன்னாய் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
காதல் எனும் குற்றம் புரிந்து வந்துள்ளேன்,,,,,,,,,,,,,
ஏற்றுக்கொள்ள்வயா என்னை ஆயுள் தண்டனை கைதியாக,,,,,,,,,,,,

நீங்காத நினைவுகள்............

என்னுள் என் உயிர் ஜீவன் நீங்கிச்சென்றாலும்,,,,,,,,,,,,,,
அவள் நினைவுகள் பற்றிக்கொள்ளும் என் கல்லறையில்

விழிகள்


இமைக்கும் நேரத்தில் பிரிய நேர்ந்தாலும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மீண்டும் சேரதுடிக்கும் அதே நொடியில்,,,,,,,,,,,,,,,,,,,,

உறைந்த நிமிடங்கள்,,,,,,,,

நாம் சேர்ந்து சிரித்த
நிமிடங்கள் அப்படியே உறைந்திருக்க கூடாதா,,,,,,,,,,,,,,,,,,,,
இன்று நீ என்
தனிமையில் நான் சிந்தும் கண்ணீர்
துளியின் ஆயுள் நீளுகிறதே

நினைவு பரிசு,,,,,,,,


என் நினைவே நீயாக இருக்கும்போது,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எதற்கு நீட்டுகிறாய் நினைவு பரிசு,,,,,,,,,,,,,,,,,,

இதய வாசல்

நீ வீசிச்சென்ற இதயத்தை கையில் பிடித்து
காத்திருக்கிறேன்,,,,,உன் இதய வாசலில்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நட்பு

புன்னகையை கொடு
கண்ணீரை தருவேன் என்றது காதல்
கண்ணீரை
தருகிறேன் என்கிறது நட்பு ............

உன் நினைவாக மட்டும்,,,,,,,,,

நிலவாக நீ,,,,,,,,,,,,,,,,
உன் நினைவாக நான்,,,,,,,,,,
எட்டி தொட முடியாத தொலைவில் நீ இருந்தாலும்,,,,,,,
உன் பிம்பத்தை அள்ளி ரசித்துகொண்டிருப்பேன்
ஒவ்வொரு இரவுகளிலும்,,,,,,,,,,

கண்ணீர் துளி


என் கன்னத்தில் முத்தமிடும் கண்ணீர் துளிகள் ,,,,,,,,,,,,
அவை ,,,,,
உன்னை நினைக்கும் தருணத்தில்
என் கண்கள் பொழியும் காதல் மழை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பனி துளி


சுட்டு தெறிக்கும் சூரிய துகள்களாக
நீ வர வேண்டும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,
உன்னால் காயும் பனி துளிகளாக
நான் வர வேண்டும்,,,,,,,,,,,,,,,,,,,
தினமும் வந்து என்னை திருடி சென்றுவிடு சூரியனே,,,,,
உனக்காக காத்திருப்பேன் புட்களின் மீது பனி துளிகளாக,,,,,,,,,,

தேயும் ஆசைகள்


நிலவோடு நிலவாக நானும் தேய்கிறேன் தினம் ஜன்னல் ஓரத்தில்,,,,,,,,,,,,,,,,,,,
நிலவை ரசிக்க அல்ல,,,,,,,,,,,,,,,,,,,,
நிலவை ரசிக்கும் என்னவளை ரசிக்க,,,,,,,,,!!!!!!!

தொலைந்த இரவுகள்

என் இரவுகளை தொலைத்து விட்டேனடி உன் நினைவுகளினால்,,,,,,,,,,,,,,
உன் கருங்க்கூந்தலை இரவுகளாக தருவாயா,,,,,,,,,,,,
இரவும் இல்லாமல் உன் நினைவும் இல்லாமல் அதில்
நான் உறங்கிக் கொள்வேன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சுமை

என்னை நீ நீங்கி செல்ல செல்ல
காற்றையும் நான் சுவாசிக்க மறுக்கிறேன்,,,,,,,,,,,,
காற்றும் சுமையாகி போனதே ,,,,,,,
நீ என் அருகில் இல்லாததால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நினைவுகள்,,,,,,,,,,,,

உனக்குள் நான் இல்லை ,,,,,,,,,,,,,,,,,,,,

ஆனாலும்,,,,,,,,,,,,,,,,,,,,

எனக்குள் உன் நினைவுகள் ஆயிரம் மின்னுதடா,,,,,,,,,,,,

என் நினைவுகள் உனக்குள் இல்லை என்றாலும்,,,,,,,,,,

உன் நினைவாக மட்டும் நான் இருப்பேனடா ,,,,,,,,,,

என்றும் உன் நினைவுகளை மட்டும்

நிலையாக கொண்டிருப்பேனடா,,,,,,,,,,,,,,

பிரிவின் வலி

உன்னோடு நான் பல தூரம் சென்றாலும்
என் கால்களில் வலி இல்லை,,,,,,,,,,,,
நெடு நேரம் சிரித்தாலும்
புன்னகைக்கு ஓய்வில்லை.............
ஆனால் புறப்படுகிறேன் என்று நீ சொல்லும்போது
மட்டும், விடை கொடுக்க
என் இதழ்களுக்கு வலிக்கிறதே ,,,,,,,,,,,,,,,,,,,,,
பிரிவின் வலி இதழ்களும் அறியுமோ ???

ஏனடி மறுக்கிறாய்,,,,,,,


உன் இரு கருவிழிகளில் காண்கிறேன்
எனது பிம்பங்களை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
விழியில் சிறை பிடித்த என்னை,,,,,,,,,,,,,,,,,,,
ஏனடி
மனதில் சிறைபிடிக்க மறுக்கிறாய்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வாடிய மலர்,,,,,,,,,,,,

மனதிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்
உணர்வுகளின் வெளிச்சத்தில் மலர்ந்த கவிதைகள்,,,,,
அதை நீ பொய்யென்று சொன்னவுடன் ,,,,,,,,
வாடிப்போனதே என் முகமும் உதிர்ந்த பூக்களைபோல ,,,,,,,,,,,

உனக்காகவே

கரையில் நீ வரைந்த உன் பெயரை
அலைகளாய் வந்து அள்ளிசெல்வேன் நான்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என் மனம் எனும் ஆழ்கடலில் வந்து தேடிப்பார் ,,,,,,,,,,,,,,,
உன் பெயர் பதித்த மணல்கள் ,,,,,,,,,
சிட்பிக்குள் மின்னிக்கொண்டிருக்கும் முத்து முத்தாக,,,,,,,,,,,,,,,,,,,,

என்னவனுக்காக

தெளிந்த வானமே,,,,,,,,,,,,,,,,,,,,,,
இன்று மட்டும் உன் வெண்மேகங்களை
என்னிடம் அனுப்பிவிடு,,,,,,,,,,,,,,,,,,,,,
என் கண்ணீர் துளிகளை அதில் நிரப்புகிறேன்,,,,,,,,
அவை பிரிந்து சென்ற என்னவனின் மீது பொழியட்டும்
அன்பு மழையாக ,,,,,

தொடர்வேன்

உன்னை பற்றிக்கொண்ட நிழலின் மீதும் எனக்கு பொறாமைதான்,,,,,,,,
உன் நிழளிநூடே நானும் தஞ்சம் கொள்கிறேன்,,,,,,,,,,,,,
இனி நானும் உன்னை தொடர்வேனடா
நிழலையும் மிஞ்சிய உன் உயிராக,,,,,,,,,,,,,,,,,,,,

கரையாத விழிகள்,,,,,,,,,,,,,,,,,,,,

உன்னில் நான் வாழ்ந்த நிமிடங்களை
நான் விழிகளில் சேர்த்து வைக்கிறேன்,,,,,
இன்று என்னில் நீ நீங்கிசென்றாலும்,,,,,,
என் கண்களில் கண்ணீர் இல்லை,,,,,
காரணம்,.,,,,,,
நினைவுகளில் உன்னை சிறை பிடித்து....
என் விழிகளில் பூட்டி வைத்த உன் பிம்பங்களை ,,,,,,,,,
கண்ணீரால் கரைக்க என்னால் இயலவில்லை,,,,

அன்பின் ஆயுதம்,,,,,,

அருகில் நீ இருந்தபோது நான்
உணரவில்லை,,,,
உன் பிரிவில் நான் உணர்கிறேன்,,,,,,,,,
தினம் நீ எனக்காக வீசிச்சென்ற
பார்வைகள் எல்லாம்
அன்பின் ஆயுதம் என்று,,,,,,,,

என்றென்றும்,,,,,,,,,

நண்பனே வாழ்கை பயணத்தில்
உன் நடைகள் தூரமாகி போகலாம்,,,,,,,,,,,,,,,,
ஆனால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என்றும் உன் நடையை சுற்றும் நிழலாக
நான் இருப்பேன்,,,,,,,
நம் வாழ்வின் இறுதிப் பயணம் வரை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இளையவனே ,,,,,,,,,,,,,,,,,,,,,,
வானமாய் நீ இருக்க
உன்னுள் தோன்றிய நிலவுதான் நான்,,,,,,,,,,,,,,,,,,,,
உனக்காகவே பிறையாய் சிரிக்கிறேன்,,,,,,,,,,
உன் அன்பில் உருகி தேய்பிறையாகிறேன் ,,,,,,,,,,,
நீ அருகிலிருப்பதால் பௌர்ணமியாகிறேன் ,,,,,,,,,,,,,,,
என்னவனே ,,,,,,,,,,,,,,
எனக்கு மட்டும் வானமாய் இரு,,,,,,,,,,,,,,,
என்றென்றும் உனக்குள் மட்டும் தோன்றி,,,,,,,,,,
உன்னுள்ளே தொலையும் நிலவு நான்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

thedal

கருவிழி ஓரத்தில் ஒரு தேடல் இருந்தது,,,,,
தேடலின் நோக்கம் தெரியவில்லை,,,,,
என் தேடலில் வெளிச்சமாய் நீ வந்தாய்,,,,,,,,
ஆனால் இமைத்த விழி திறப்பதட்குள்
நீ மறைந்து போனாயே,,,,,,,,,,,,,!!!
பனி மூட்டம் உன்னை மறைத்திருக்கலாம்,,,,,,,,,,,,
ஆனால் என் விழியில் பதிந்த உன் பிம்பங்கள்
என்றுமே நான் இமைக்காமல் தேடும்
தேடல்கள்தான் நண்பனே,,,,,
மீண்டும் காத்திருக்கிறேன் உன் அடுத்த வரவுக்காக,,,,,,,
வருவாயா நீ என் வாசல் தேடி,,,,,???




********செலினா**********
கனவோடு வாழ்ந்த வாழ்கை சுகமாய் தெரிகிறது
என்னவனே கனவில் நீ என்னோடு இருப்பதால் ,,,,
காணும் கனவு இனிமைதான்,,,,
ஆனால் காண்பது வெறும் கனவுதான் என்கிறபோது
கனவும் தீயாய் சுடுகிறது என்னை,,,,,

உன்னில் என் அன்பு,,,,,,,,

அன்பே
என் கவிதையின் வரிகள் காதல் கொண்டு எழுதப்படவில்லை
காதலைவிட மேலான அன்பை கொண்டு எழுதுகிறேன்,,,,
வரிகளின் எழுத்துக்களை பிழிந்து பார்,,,,,,,,,
என் கண்ணீர் துளிகள் வழிந்தோடும்,,,,,,,
எழுதிய கவிதையை மறந்து விடாதே...,,,,,,,,
என் விழிகளில் உனக்காக வழியும் அன்பை
உதறி விடாதே,,,,,,


********* இனியவள் செலினா ************

நினைவுகளின் தொலைவிலே

உன்னை தொலைக்க மனம் இல்லாததினால்தான்
தினம் நான் என்னை தொலைக்கிறேன்
உன் நினைவுகளினாலே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


***********இனியவள் செலினா ***************

அவன் சுவாசம்,,,,,,,,,,,,

காற்றே
என் அருகில் தான் அவன் இல்லை
அவன் விடும் மூச்சுக் காற்றையாவது
என் அருகில் கொண்டுவா,,,,
என் நெஞ்சம் உயிராக அதை
சுமந்து கொள்ளட்டும்,,,,,

**********இனியவள் செலினா *************

வார்த்தை கடல்,,,,,,,

மனதிட்குள் தோன்றிடும் வார்தைகள்,,,
மனதோடு பசைபிடித்தது
ரணம் கொண்ட என் வார்தைகளை
சொல்ல மனம் இன்றி,,,,
மனதோடு பூட்டி வைக்கிறேன்
உனக்காக பிறந்த வார்தைகளை,,,,,,,,
நீ புரிந்து கொள்ள மறுத்தாலும்
மௌனம் காக்கும் என் இதழ்களுக்கு புரியும்
என் மனதில் குவிந்திருக்கும் வார்தைகளின் ஆழம்,,,,,

துணை

உனக்காக காத்திருக்கும் நிமிடங்களில்.....
நீ அன்பை பொழிந்த தருணங்கள் தான் எனக்கு துணை,,,,,,,,,,,






********இனியவள் செலினா***************

காதல் காயம்

தென்றலின் மென்மையை பறித்து
நம் காதலின் கவிதையை நெய்தேன்,,,,,,,,,,,,,
ஆனால்,,,,,,,,,,,,
நீயோ தீயிலே அம்பினை உருக்கி
என் நெஞ்சிலே பாய்ச்சி சென்று விட்டாயே,,

தொலையும் உயிர்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சிறிய சந்திப்பில் நம் மகிழ்ச்சி,,,,,,,,
சிறிய புன்னகையில் நம் கனவுகள்,,,,,,,
சிறிய கோவத்தில் வந்த சண்டைகள்,,,,,,,,
சிறிய எதிர்பார்ப்பில் சில தோல்விகள் ,,,,,,,,,,
சிறிய ஊடல்களில் நம் தாபங்கள்,,,,,,
இவையெல்லாம் நம் உறவில் நான் கண்டு ரசித்தவை,,,,,,,
ஆனால்,,,,,,
சிறிய பிரிவு கூட நம்மிடத்தில் வேண்டாம் அன்பே,,,,,,,,,
உன் பிரிவை தாங்காமல் என் உயிரும் சிறிதாகி தொலைந்து போகுமே........

நட்பே

எங்கோ ஒரு மூலையில் நீ,,,,,,,,,,
உன் முகம் கூட அறியாமல் நான்.,,,,,,,
ஆனால் நம் அன்போ
நம் உடலுக்குள் இருக்கும் உயிரை விட நெருக்கமானது............
நன்றி நட்பே ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சுவாசமே,,,,,,,,,,,,,,,,,,,,

உன்னை பார்த்த நொடியில் உன் சுவாசத்தில் சிக்கி தவிக்கிறது என் உயிர் மூச்சு,,,,,
இனி உன் இறுதி மூச்சுவரைதான் என் ஆயுளும் நீளும் அன்பே

உயிரே

உயிரே
அருகில் நீ இல்லாத சமயம்
என் உள்ளத்தில் ஏனோ வெறுமை,,,,,,,,,,,
என்னை தாக்கி சென்ற புயல்
நீயடா
உன்னை பிரிந்த தனிமை
என்னை தாக்கும்போது,,,,,,
உன் நினைவுகள்
தென்றலாய் வந்து
என்னை தாலாட்டுமடா ....

வென்று போ மௌனங்களை


உனக்காக நான் சொல்ல காத்திருக்கும்
வார்த்தைகளின் நீளங்களை நான் அடுக்கி வைக்கட்டுமா
அது விண்வெளியையும் தாண்டி செல்லும்,,,,,,,,,,,
இருந்தும் ஏனடா உன்னை கண்டதும்
என் இதழில் மௌனம் குடிகொள்கிறது,,,,,,

நீ பேசும் நேரத்தில் மட்டும் நான்
வார்தைகளை வேட்டையாடுகிறேன்,,,,,,

இருந்தும் என்ன பயன்,,,,,
என் எண்ணம் அறிந்து
வார்த்தைகள் தப்பி விட்டன
பறவைகளைபோல

ஆனால் அன்பே நீ பேசும் வார்த்தைகளை மட்டும்
ஒன்று விடாமல் சேகரிக்க முடிகிறது என் இதயத்திற்கு

நீ சென்ற பிறகும் நீ பேசிச்சென்ற வார்த்தைகளை அசைபோடும்
என் எண்ணங்களை என்னால் சிறைபிடிக்க முடியவில்லை,,,,,,,

இப்போதுதான் புரிகிறது,,,,,,,,
என்னைவிட என் இதயதிட்கு
உன் மீது கொண்ட காதல் ஆழம் என்று,,,,,,,,,,,

மீண்டும் உன் வரவுக்காக காத்திருக்கிறேன்,,,,,
அன்பே
உன்னை கண்டதும் என் இதழ்கள் கொண்ட
மௌன யுத்தத்தை நீ வென்று போ,,,,,,,,,,,,,,,,,,,,

காத்திருக்கிறேன்

பல கோடி ஆசைகளை அள்ளி கொண்டு
உன் இதய வாசலில் காத்திருக்கிறேன்,,,,,,,,,,
உன் இதயக்கதவு இரும்பானால் என்ன
துரும்பானால் என்ன........
என் ஆசைகளை நீ அள்ளிச்செல்லும் வரையில்
மரணவாசலையும் எதிர்கொண்டு பூத்திருப்பேன் அன்பே,,,,,,,,,,,,,,,,,

**********இனியவள் செலினா*******************

HAPPY MOTHERS DAY*

அம்மா
உன்னை பாட நான் வார்த்தை எங்கு தேடுவேன்,,,,,,,,,,
நான் பேசும் வார்தைக்கு இலக்கணம் நீயம்மா,,,,,,,,,,

உன் தியாகங்களை நான் வெல்ல முடியுமா,,,,,,,
இவ்வுலகில் என்னை தோன்ற வைத்தாயே,,,,,,,
நீ கடவுளின் உருவமம்மா ,,,,,,,,,,,
உன் அன்பை விட பெரியது இவ்வுல்லகில் வேறு எதுவும் இல்லை,,,,,,,,,
உன்னைவிட எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல,,,,,,
அம்மா என்றும் எனக்கு நீயே வேண்டும்,,,,,,,,,,,
எத்தனை கொடி ஜென்மம் வந்தாலும்,,,,,,
உன் வயிற்றில் நான் உதிக்க வேண்டும்,,,,,,,,,,

அம்மா உன்னிடத்தில் நன்றி சொல்ல எனக்கு வார்தை இல்லை,,,,,,,
உன் உயிர் ஜீவன் நானம்மா ,,,,,,,,,
என்றும் என் பிறவி பலன் உன் சொல்படியே ஆகட்டும் அம்மா,,,,,,,,

***** HAPPY MOTHERS DAY*********
***** I LOVE YOU MOM***********
*** INIYAVAL SELINA***

Sunday, May 24, 2009

பிரிவு,,,,,,,,,,,,,,

வானில் தோன்றும் நிலவு நீ,,,,,,
உன் பிம்பங்களை மட்டும் சுமக்கும் கடல் நான்,,,,,,,,,
தொலைவிலே நீ இருந்தாலும்,,,,,,,,,,
உன் நினைவிலே
என் உயிரை சுமப்பேனடா


*******இனியவள் செலினா********